கட்டிகளுக்கு மருந்து
அரிசி மாவு, மஞ்சள் பொடி இவை இரண்டையும் விளக்கெண்ணெய் விட்டு வேக வைத்து கட்டிகளின் மீது கட்டி வர கட்டி பழுத்து உடையும்.
வல்லாரை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கட்டி வர நெறிக் கட்டிகள் கரையும்.
ஆமணக்கு விதையின் ஓட்டினை நீக்கி, பருப்பை அரைத்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டிவர, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.
சாதாரண தோல் கட்டிகளுக்கு, விளக்கெண்ணெயும், மஞ்சளும் குழைத்து தடவி வந்தால் விரைவில் பழுத்து உடையும்.
முகத்தில் வரும் சிறு கட்டிகளுக்கு மஞ்சள்தான் சிறந்த மருந்து. இரவில் உறங்கச் செல்வதற்கு முன் கட்டிகள் மீது மஞ்சள் அல்லது சந்தனம் வைத்துவிட்டு படுத்தால் எளிதில் உடைந்துவிடும்.