தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

அழகுத் தெய்வம்

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்.யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;
யோகமேதவம் தவமே யோகமென வுரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதா னறிந்திடுமோ வென்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவதோ வேறாமே என்றாள்.காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.

மனப்பெண்