தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

சீடனாகும் தகுதி யாருக்கு?

ஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன பார்த்தாய்? என்று சொல் என கூறிவார்.

அவர்கள் குளத்தைப் பார்த்துவிட்டு வந்து சொல்லும் பதிலை வைத்து அவர்களை சீடனாக ஏற்றுக் கொள்வார். பதில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்.

அவரிடம் இது பற்றி விளக்கம் கேட்டதற்கு, ஒரே கேள்வி மூலமாக எப்படி சீடர்களைத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு ஞானி, குளத்தில் மீன்கள் துள்ளுகின்றன என்று சொல்பவனைச் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன். அதில் என் உருவம் தெரிந்தது என்று சொல்பவனை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் அப்படிப்பட்டவன், தான் என்ற எண்ணம் உடையவன். அவனுக்கு ஞானத்தை ஊட்ட முடியாது என்று விளக்கம் அளித்தார்.

மாறியதா மனம்?