தமிழில் நல்லதோர் இணையத்தினை முன்வைக்கவேண்டும் என்பதே என் எண்ணம். எவ்வளவோ நல்ல இணையங்கள் ஏலவே இருக்கின்றன, இருந்தும் நானும் என்னுடைய முயற்சியால் ஒரு தமிழ் நூல்களின் தொகுப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவும் என்னுடைய கற்கைகளை செய்துபார்க்கும் களமாகவும் இதனை உருவாக்கி மேம்படுத்தி வருகின்றேன்.

எவ்வித இலாபகரமான விடயங்களும் இன்றி தனியே, செய்துவிடவேண்டும் என்ற கருத்தே என் எண்ணத்தில். விடயங்கள் வேறு இணையங்களில் இருந்தும் எடுக்கப்படுவதால், இலக்கண, எழுத்துச் சீரின்மைகள் இருக்கலாம்.

காலப்போக்கில் எல்லாம் சீராக்கப்படும், நிறைய மாற்றங்கள் செய்ய விருப்பம், என்னோடு இணைத்திருக்கும் நல்ல மனங்களும் கருத்துக்களும் இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள வழி செய்யும்.

அன்புடன் செ.அ.சுரேஸ்குமார். [http://www.facebook.com/saskumar]


அரசடி குறுக்கு வீதி,
கரவெட்டி வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம், இலங்கை.
தொலைபேசி : 0 (094) 71 53 64 797

காலை வைத்துக் கண்டுபிடி

புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவன் ஒருவன் விலங்கியல் தேர்விற்காக இரவு முழுவதும் கண் விழித்துப் படித்தான்.
மறுநாள் தேர்வு எழுதுவதற்காக வகுப்பு அறைக்குள் நுழைந்தான். பேராசிரியரின் மேசையின் மேல் உடல் முழுவதும் போர்வையால் மூடிக் கட்டப்பட்டிருந்த பத்துப் பறவைகள் வைக்கப்பட்டு இருந்தன. அந்தப் பறவைகளின் கால்கள் மட்டுமே தெரிந்தன.
தேர்வு நன்றாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் முன் வரிசையில் அமர்ந்தான் அவன்.
பேராசிரியர் வகுப்பிற்கு வந்தார். மாணவர்களைப் பார்த்து, "நீங்கள் ஒவ்வொருவரும் மேசையின் அருகே வந்து பறவைகளின் கால்களைப் பார்க்க வேண்டும். அதைக் கொண்டே அவற்றின் பெயர், விலங்கியல் பெயர், பழக்க வழக்கங்கள், சிறப்பியல்புகள் எல்லாவற்றையும் எழுத வேண்டும். இதுதான் தேர்வு" என்றார்.
ஒவ்வொரு பறவையின் கால்களையும் உன்னிப்பாகப் பார்த்தான் அவன். அவனால் எந்தப் பறவையின் பெயரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரவு கண் விழித்துப் படித்தது எல்லாம் வீணாயிற்றே என்று கோபம் கொண்டான் அவன்.
பேராசிரியரைப் பார்த்து, "இப்படியா தேர்வு வைப்பது? உங்களைப் போன்ற முட்டாளை நான் பார்த்ததே இல்லை" என்று கத்திவிட்டு வெளியே செல்லத் தொடங்கினான்.
அதிர்ச்சி அடைந்த அவர், அவனை மேலும் கீழும் பார்த்தார். வகுப்பில் நிறைய மாணவர்கள் இருந்ததால் அவன் பெயர் தெரியவில்லை. "உன் பெயர் என்ன?" என்று கேட்டார்.
"அப்படி வாருங்கள் வழிக்கு" என்ற அவன் தன் பேண்ட்டை கால் முட்டி வரை சுருட்டினான்.
தன் கால்களை அவரிடம் காட்டி, "இவற்றைப் பார்த்து என் பெயரைச் சொல்லுங்கள் பார்ப்போம்" என்றான்.

<< படி‌ச்ச ந‌ரி  |  சிங்கத்திற்கு அஞ்ச வேண்டாம் >>